கார்கள் மீது பஸ் மோதல்; 4 பேர் காயம்


கார்கள் மீது பஸ் மோதல்; 4 பேர் காயம்
x

கார்கள் மீது பஸ் மோதல்; 4 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

ஜீயபுரம்:

திருச்சி பெட்டவாய்த்தலை அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 38). கார் டிரைவரான இவர் நேற்று காலை ஒரு காரில் திருச்சி மங்கலம் மால்வாய் கிராமத்தை சேர்ந்த மோனிஷா(வயது 10), அதர்வா(5), ஆதித்தமிழன்(5), லட்சுமி(70) ஆகியோரை ஏற்றிக்கொண்டு, பெட்டவாய்த்தலையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி-கரூர் சாலையில் கம்பரசம்பேட்டையை அடுத்த பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, பின்னால் கரூரில் இருந்து வந்த தனியார் பஸ், கார் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த பஸ்சை திருப்பியதில் கரூர் நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் சரவணகுமார் ஓட்டிச்சென்ற கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கம்பரசம்பேட்டை பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் கரூர் மாவட்டம் சேப்பளாப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராைஜ(வயது 38) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இந்த பகுதியில் நடந்த விபத்துகளில் 4 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story