கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நல்லுசாமி தலைமை தாங்கினார். தலைவர் அருள்ராஜ், பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேபிள் டி.வி. நிலுவை தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில் போலீசார், வருவாய்த்துறையை பயன்படுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை குற்றவாளி போல் சித்தரிக்கும் போக்கை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு, தற்போது செயல்படாத செட்டாப் பாக்ஸ்களுக்கும், அவற்றுக்கான கிரயத்தொகையை வழங்க கோருவதை கைவிட வேண்டும். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் சங்க நிர்வாகிகள் இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story