அரூர் அருகே2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டிபொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்


அரூர் அருகே2 தலை, 4 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டிபொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
x
தினத்தந்தி 22 Sep 2023 7:30 PM GMT (Updated: 22 Sep 2023 7:31 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே உள்ள பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்தர். விவசாயி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்க்கும் மாடு ஒன்று நேற்று ஆண் கன்று ஒன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி 2 தலை, 4 கண்களுடன் காணப்பட்டது. இதை கண்டு ரவீந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கன்றை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Next Story