அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்


அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
x
தினத்தந்தி 1 Oct 2023 7:00 PM GMT (Updated: 1 Oct 2023 7:01 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழ் தென்றல் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவுதமன், கல்வியாளர் நேதாஜி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாமில் பள்ளி வளாக தூய்மை, போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம், டெங்கு விழிப்புணர்வு, கால்நடை மருத்துவ முகாம், மாணவர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி மற்றும் யோகா போன்ற பல்வேறு செயல்பாடுகள் நடைபெற உள்ளது. இதில் உதவி திட்ட அலுவலர் தனசேகரன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் சேகர் நன்றி கூறினார்.


Next Story