கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம் வழுதரெட்டி காலனி பகுதியில் தாலுகா போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த தெய்வகடாட்சம் மகன் வினித்குமார் (வயது 20) என்பதும், இவர் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினித்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story