கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

கடலூாில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூத்தப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் எம்.புதூரை சேர்ந்த ஏழுமலை (வயது 35), திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த தீனா (20), மூர்த்தி (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





