புதுக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் - கார் மோதி விபத்து - ஒருவர் பலி


புதுக்கோட்டை: தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் - கார் மோதி விபத்து - ஒருவர் பலி
x
தினத்தந்தி 4 Feb 2024 3:46 AM GMT (Updated: 4 Feb 2024 6:37 AM GMT)

புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கார் சென்றுகொண்டிருந்தது. அதேசாலையில் டாடா ஏஸ் சரக்கு வாகனம் தண்ணீர் எடுத்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சரக்கு வாகனமும் - காரும் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story