மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் உயிரிழந்தார்.

திருச்சி

மணப்பாறை:

கார் மோதியது

மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சபரீசன்(வயது 21). இவரது அக்காள் நிவேதா(25). இவர்கள் 2 பேரும் நேற்று திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரட்டுப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னால் வந்த, கள்ளக்குறிச்சியில் இருந்து தேனி நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு

அங்கிருந்து நிவேதா மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story