வாகனம் மோதி கார் டிரைவர் சாவு


வாகனம் மோதி கார் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:46 PM GMT)

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்

விழுப்புரம்

திண்டிவனம்

கார் டிரைவர்

திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் தென்னரசு(வயது 44). டிரைவரான இவர் சென்னையில் கார் ஓட்டி வருகிறார். இவர் அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பத்தன்று வேலை முடிந்ததும் தென்னரசு சென்னையில் இருந்து அரசு பஸ்சில் ஏறி ஊருக்கு புறப்பட்டார். திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் சுங்கச்சாவடியில் வந்தபோது அவர் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வாகனம் மோதி பலி

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தென்னரசுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்,

இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசுவின் மீது மோதி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story