மொபட் மீது சரக்கு வாகனம் மோதல்; விவசாயி பலி

மொபட் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
செஞ்சி,
விழுப்புரம் அருகே நரசிங்கனூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55).விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுரோட்டில் தனது மொபட்டுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்,
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





