போக்குவரத்து விதிமீறிய 166 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிமீறிய 166 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Oct 2023 8:30 PM GMT (Updated: 2 Oct 2023 8:30 PM GMT)

கோத்தகிரியில் போக்குவரத்து விதிமீறிய 166 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி பகுதியில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 35 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சப்-இ்ன்ஸ்பெக்டர் மனோகரன் விதிகளை மீறி இயக்கிய 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ.34 ஆயிரத்து 500 அபராதம் விதித்தார். இதேபோல் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி மேற்கொண்ட வாகன தணிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறிய 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ.60 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் 166 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ.ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story