பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு


பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Sep 2023 7:30 PM GMT (Updated: 16 Sep 2023 7:30 PM GMT)

பணம் வைத்து சூதாயடி 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம்

கெங்கவல்லி:-

கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் நேற்று கடம்பூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள கருப்பனார் கோவில் அருகே கெங்கவல்லி இந்திரா நகரை சேர்ந்த பிரபு (வயது 35), சக்திவேல் (40), சேகர் (40) ஆகிய 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story