அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - விசாரணை 31-ந்தேதிக்கு ஒத்திவைப்பு


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - விசாரணை 31-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
x

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணை வரும் 31-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட 46 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை மீண்டும் விசாரித்து செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றப்பத்திரிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் சில விளக்கங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.



Next Story