குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு - போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்


குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவன் கொல்லப்பட்ட வழக்கு - போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
x

புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகாயராணி விக்டோரியா மீது, காரைக்கால் போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

காரைக்கால்,

காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவனுக்கு, அவனுடன் படிக்கும் மாணவியின் தாயார் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 3 மாதமாக புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகாயராணி விக்டோரியா மீது, காரைக்கால் போலீசார் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ள அந்த குற்றப்பத்திரிக்கையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள், சிறுவனுக்கு கொடுப்பதற்காக எலி மருந்து வாங்கியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆதாரங்களை போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.


Next Story