மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி


மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி
x

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 மணி நேர சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 மணி நேர சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. மதுரை விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கிய்யுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது இலங்கை, துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story