மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஒப்பந்தம்


மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
x

விவசாயிகளை தாக்கும் ஸ்க்ரப் டைபஸ் நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

திருவாரூர்

திருவாரூர்;

விவசாயிகளை தாக்கும் ஸ்க்ரப் டைபஸ் நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், மரபியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவாரூர் அடுத்த நீலக்குடி பகுதியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூருவில் உள்ள மரபியல் ஆராய்ச்சி செய்யும் டாடா நிறுவனமும், ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் கண்டறியும் ஆராய்ச்சியை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னிலையில் பதிவாளர் திருமுருகன் மற்றும் மரபியல் ஆராய்ச்சி செய்யும் டாடா நிறுவனத்தின் இயக்குனர் ராகேஷ் கே. மிஸ்ரா ஆகியோர், கையெழுத்திட்டனர்.

எலிகள்

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை உதவி பேராசிரியர் ஜெயலட்சுமி கூறியதாவது:-

ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் விவசாயிகளை அதிக அளவில் தாக்க கூடிய நோய் ஆகும்.இந்த நோய் கரையான் மற்றும் எலிகளில் இருக்கும் ஒட்டுண்ணிகள் மூலம் பரவுகிறது. காய்ச்சல், வாந்தி, உடல் வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோய்க்கு சரியான சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் அது கோமா மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். தற்போது, கிடைக்கும் ஒரே சிகிச்சை, 'டாக்ஸிசைக்லைன்' என்ற மருந்தை செலுத்துவதுதான். இது நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் முழுமையான நிவாரணத்தை வழங்காது.தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை சார்பில் ஒரு குழு மற்றும் ஆராய்ச்சியாளர் மான்சி மாலிக் எலிகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பாக்ட்டீரியா மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி ஸ்க்ரப் டைபஸ் நோய்க்கு மருத்துவ முறையில் தீர்வு காண பெரும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story