பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா


பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா
x

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 95 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் 102 பயனாளிகளுக்கு கழிவறை கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், லோகநாதன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பொன் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.2 கோடியே 40 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் 95 பயணாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையையும், 102 பயணாளிகளுக்கு கழிவறை கட்டுவதற்கானஆணை என மொத்தம் 197 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story