பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
x

கம்பைநல்லூர் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்து கொண்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி

மொரப்பூர்

கம்பைநல்லூர் அருகே உள்ள கதிர்நாயக்கனஅள்ளி கோடிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். சம்பவத்தன்று இவரது மனைவி வீட்டில் பூ கட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 27 வயது வாலிபர் திடீரென வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து ராமன் கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story