எழும்பூரில் பெண் போலீசிடம் சங்கிலி பறிப்பு


எழும்பூரில் பெண் போலீசிடம் சங்கிலி பறிப்பு
x

எழும்பூரில் பெண் போலீசிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

சென்னை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 25). தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையின் போலீசான இவர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி. லட்சுமி பிரசாத் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். பிரியா நேற்று முன்தினம் சாதாரண உடையில் எழும்பூர் போலீஸ் அதிகாரி மெஸ் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர் சுகுணா தேவி (58). இவர் நேற்று காலை வேளச்சேரி விரைவு சாலையில் நடைபயிற்சியில் ஈடிபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுகுணா தேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.


Next Story