மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 8 March 2023 12:45 AM IST (Updated: 8 March 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமநாதன் வீதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி ரெங்கநாயகி (வயது77). இவர் நேற்று காலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரெங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரையும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு மன்னார்குடி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story