மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமநாதன் வீதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி ரெங்கநாயகி (வயது77). இவர் நேற்று காலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரெங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரையும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு மன்னார்குடி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





