தமிழகத்தின் 18 மாவட்டங்களில் காலை 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் 18 மாவட்டங்களில் காலை 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 22 Nov 2023 1:18 AM GMT (Updated: 22 Nov 2023 1:48 AM GMT)

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது. அந்த வகையில் இன்று (22-11-2023) முதல் நாளை மறுதினம் (24-11-2023) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் காலை 7 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 18 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story