மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* ஆவடி-சென்டிரல் இடையே மாலை 6.15 மணிக்கும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கும், சென்டிரல்-ஆவடி இடையே இரவு 11.30 மணி மற்றும் 11.45 மணிக்கும், இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* அரக்கோணம்-கடற்கரை இடையே அதிகாலை 4 மணிக்கும், சென்டிரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் இடையே அதிகாலை 1.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 19-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரி-கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கும், வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்களுக்கு பதிலாக மேற்கண்ட வழித்தடங்களில், அதே நேரத்தில் பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

* அரக்கோணம்-வேளச்சேரி இடையே அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை அரக்கோணம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-சென்டிரல் இடையே இரவு 9.50 மணி, 10.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில் நாளை ஆவடி-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story