எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்


எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்
x

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை எழும்பூர்-மதுரை(வண்டி எண்:12635) இடையே மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் ( புதன்கிழமை) எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும்.

* காரைக்குடி-எழும்பூர்(12606) இடையே காலை 5.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

* தஞ்சாவூர்-திருச்சி(06869) இடையே காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மறுநாள் முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story