மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிநாட்டு வீரர்கள் வசதிக்காக விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள்


மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: வெளிநாட்டு வீரர்கள் வசதிக்காக விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள்
x

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வரும் வெளிநாட்டு வீரர்கள் வசதிக்காக விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

சென்னை

மாமல்லபுரத்தில் சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை மாதம் 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா். போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரா், வீராங்கனைகள் தங்கள் நாடுகளில் இருந்து விமானங்களில் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்குவார்கள். போட்டிகளை காண ஏராளமான வெளிநாட்டு பாா்வையாளா்களும் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதனால் சென்னை விமான நிலையத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிநாட்டவா்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக வருபவா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை சென்னை விமான நிலையம் உள்நாடு, பன்னாட்டு முனையங்களில் செய்ய இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்து உள்ளது.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் விமான நிலைய உயா் அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள், குடியுரிமை அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தமிழக போலீஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், போட்டிகளில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள், சிரமம் இல்லாமல் சோதனைகளை விரைந்து முடித்து வெளியேறும் வகையில் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை, சுங்க சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை என அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்ட்டா்கள் அமைக்கவும், உரிய பாதுகாப்பு உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.


Next Story