திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்


திருப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
x

பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூரில் இன்று டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவினாசி பழங்கரையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட திருப்பூர், கோபி, பெருந்துறை, பவானிசாகர், சத்தியமங்கலம், அவினாசி, கவுண்டம்பாளையம், கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து திரளான மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் அமைச்சர் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூரில் இன்று டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.


Next Story