பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து


பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  வாழ்த்து
x

தேர்வை அச்சமற்று எதிர்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை,

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

பிளஸ் 2 பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான பிளஸ் 2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.

தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Next Story