காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.

இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இந்தியாவின் புதிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற நெறிமுறைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் போராடும் ஒரு முக்கியமான கட்டத்தில் கார்கே காங்கிரஸ் கட்சியின் பொறுப்பை ஏற்றுள்ளார். புதிய பதவில் அவர் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



Next Story