எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
x

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் இராஜசேகர் பச்சைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள்" என்று கூறியுள்ளார்.


Next Story