ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து


ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
x

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் இந்தியா, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வீரர்களை களமிறக்கி உள்ளது. அதன்படி ஆசிய விளையாட்டில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 60 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்த எக்ஸ் பதிவில்,

ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த பிரித்விராஜ் தொண்டைமான், டென்னிஸ்-இல் வெள்ளி பதக்கம் வென்ற ராம்குமார் ராமநாதன், ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story