கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி - மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்பெற கலெக்டர் அழைப்பு


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி - மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்பெற கலெக்டர் அழைப்பு
x

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்று பயன்பெற கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியான தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒன்றிணைத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக விற்பனை வாய்ப்புகளை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்து கொண்டு அரசுத்துறைகள் மூலமாக நடைபெறும் விற்பனை கண்காட்சி மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தொடர்புடைய கண்காட்சியில் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியில் பங்குபெற விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் காஞ்சீபுரம் மாவட்ட மகளிர் திட்ட மேம்பாட்டு அலுவலகத்தில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, குழுவின் தீர்மான புத்தகம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டு்கொள்ளப்படுகிறது. எனவே, இத்தகவலுடன் திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சீபுரம் 631 501 என்ற முகவரியில், மேலாளர் 8438969466 மற்றும் உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) 9444094282 ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களது தகவல்களை பதிவு செய்து கொண்டு மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தரப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story