சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி - டிஎன்பிஎஸ்சி விளக்கம்


சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
x
தினத்தந்தி 5 Nov 2023 7:42 AM GMT (Updated: 5 Nov 2023 7:51 AM GMT)

சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் இன்று சிவில் நீதிபதி தேர்வு நடைபெறுகிறது. காலை, பிற்பகல் என இரண்டு வேளையாக தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த நிலையில், வடசென்னையில் உள்ள தேர்வு மையத்தில் மதியம் நடைபெறவிருக்கின்ற தேர்வுக்கான கேள்வித்தாள் காலையிலேயே விநியோகிக்கப்பட்டதால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்து டிஎன்பிஎஸ்சி கூறுகையில், " இந்த தேர்வை நடத்துவது சென்னை உயர் நீதிமன்றம். அவர்கள் தயார் செய்த கேள்வித்தாள்களை தான் எங்களிடம் கொடுத்தார்கள். நாங்கள் அதை தேர்வர்களுக்கு வினியோகம் செய்தோம். இதில் எங்களுடைய தவறு எதுவும் இல்லை" என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


Next Story