செங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி


செங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி
x

செங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி நடைபெற்றன.

செங்கல்பட்டு

தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர் கடன் நகை கடன் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் கேரளா மாநிலத்தில் வழங்கப்படுவது போல ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றன. செங்கல்பட்டு பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தன.

இந்த பேரணிக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோதண்டராமன் மாவட்ட பொருளாளர் ராஜாமணி முன்னிலை வகித்தனர். பின்னர் 12 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திடம் வழங்கினார்கள்.


Next Story