மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுமி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுமி பலி
x
தினத்தந்தி 9 Jun 2023 7:05 PM GMT (Updated: 10 Jun 2023 1:11 AM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் சிறுமி உயிரிழந்தார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

மோட்டார் சைக்கிள் மோதல்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள சின்னநாகலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி சித்ரா(வயது 40), மகள் சாந்தி (17). நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் சாந்தியும், சித்ராவும் பெரியநாகலூர் மேட்டுத்தெரு-கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளை மேட்டுத்தெரு வளைவில் திருப்பியபோது எதிரே தத்தனூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (26) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாந்தி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுமி பலி

இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த சித்ரா, ராஜசேகர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story