இலங்கை மன்னார் பகுதியில் கரை ஒதுங்கிய சரக்கு கப்பலால் பரபரப்பு


இலங்கை மன்னார் பகுதியில் கரை ஒதுங்கிய சரக்கு கப்பலால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:45 PM GMT)

இலங்கை மன்னார் பகுதியில் கரை ஒதுங்கிய சரக்கு கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை மன்னார் அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் பெரிய கப்பல் ஒன்று கடற்கரையை ஒட்டிய பகுதியில் மிதந்து வந்துள்ளது. கடல் அலை மற்றும் காற்றின் வேகத்தால் மன்னார் அருகே உள்ள நரிகுடா கடற்கரையில் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கி நின்ற அந்த கப்பலை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கை கடற்படையினர் அங்கு விரைந்து சென்று மன்னார் பகுதியில் கரை ஒதுங்கிய கப்பல் என்ன மாதிரியான சரக்குகளை ஏற்றி வந்தது, அந்த கப்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் கரை ஒதுங்கிய இந்த சரக்கு கப்பல் தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரி மாவட்ட துறைமுக பகுதியில் இருந்து சென்றதா? அந்த கப்பலில் மாலுமிகளுடன் தமிழக மீனவர்கள் யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் ராமேசுவரத்தில் உள்ள மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் தொடர்பு கொண்டு விவரம் கேட்டு வருகின்றனர்.


Next Story