ஒகேனக்கல்லில் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த 195 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நடவடிக்கை

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் மீன்வளத்துறை பணியாளர்கள் மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 30-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்திய சோதனையில் 5 கடைகளில் அழுகிய நிலையில் இருந்த 195 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மீன்கள் நிலத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அழுகிய நிலையில் உள்ள மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





