மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
x

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெரிய திருக்கோணம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதிக்கு, நேற்று அப்பகுதியில் உள்ள மருதையாற்று படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்குள்ள அய்யனார் கோவில் அருகே சென்றபோது எதிரே மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபரை மறித்து விசாரிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அங்கு வந்து, மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.


Next Story