கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு


கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு
x

கார் மோதி கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.

திருச்சி

வையம்பட்டி:

கார் மோதியது

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் பவுல்ராஜ்(வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆவாரம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றார்.

அப்போது சென்னையில் இருந்து சபரிமலை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் படுகாயம் அடைந்த பவுல்ராஜை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story