பொன்னேரி அருகே மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதல் - அதிர்ஷடவசமாக டிரைவர் உயிர் தப்பினார்


பொன்னேரி அருகே மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதல் - அதிர்ஷடவசமாக டிரைவர் உயிர் தப்பினார்
x

பொன்னேரி அருகே மின்கம்பம் மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் லாரி டிரைவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார்.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் கூட்டு சாலை முதல் கிருஷ்ணாபுரம் சந்திப்பு வரை நெடுஞ்சாலை செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவொற்றியூரில் இருந்து ஆந்திர மாநிலம் தடா வரை கன்டெய்னர் லாரி ஒன்று சரக்குகளை ஏற்றுக்கொண்டு தடம்பெரும்பாக்கம் சாலையில் வந்துக்கொண்டிருந்தது.

இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்படும் நிலையில் கன்டெய்னர் லாரி லட்சுமி அம்மன் கோவில் அருகே சென்ற போது மின்கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மின் இணைப்பு கம்பிகள் லாரி மீது உரசி அறுந்து விழுந்தது.

மேலும் தெரு விளக்குகள் எரியாத நிலையில் கன்டெய்னர் லாரி மின் கம்பத்தின் மீது மோதியது. விபத்தில் மின்கம்பம் உடைந்து சேதம் அடைந்தது. இதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்த நிலையில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி மின் கம்பிகளை சரி செய்யப்பட்டு பின்னர் மின்சாரம் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தடபெரும்பாக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story