கொரோனாவுக்கு 7 பேர் பாதிப்பு


கொரோனாவுக்கு 7 பேர் பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 7 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 4 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேர், வீரபாண்டியில் 2 பேர், நங்கவள்ளி, கெங்கவல்லியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உள்பட 30 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story