கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது


கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகமெங்கும் 31-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 100 தடுப்பூசி மையங்களில் 4 ஆயிரத்து 400 பணியாளர்களைக் கொண்டு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுவரை நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 15 லட்சத்து 54 ஆயிரத்து 267 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 18 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு முதல் தவணை 94.2 சதவிகிதமும் மற்றும் இரண்டாவது தவணை 78.2 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்கள் மற்றும் 15 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்திக் தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story