பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஆகஸ்ட் 16-ந்தேதி தொடக்கம்


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு - ஆகஸ்ட் 16-ந்தேதி தொடக்கம்
x

பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு, இன்று(ஜூன் 20) முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி மூலம் தங்கள் விண்ணப்பங்களை சம்ர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும். இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண்(ரேண்டம் எண்) ஜூலை 22 ந் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 16-ந்தேதி கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18 ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 22 ந் தேதி முதல் அக்டோபர் 14 ந் தேதி வரை நடைபெறும்.

இதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும். அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 17,18 ந் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story