கடலூர் : சிவனார்புரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து



சிவனார்புரம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடோன் தரைமட்டமானது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிவனார்புரம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குடோன் தரைமட்டம் ஆனது.
மேலும் இந்த விபத்து காரணமாக 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் 80% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire