வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
x

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1.600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் 2-வது யூனிட்டில் உள்ள முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story