மாரண்டஅள்ளி அருகேமொபட் மோதி பெண் சாவு


மாரண்டஅள்ளி அருகேமொபட் மோதி பெண் சாவு
x

மாரண்டஅள்ளி அருகே மொபட் மோதி பெண் இறந்தார்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி எல்லம்மாள் (வயது 43). சம்பவத்தன்று இவர் மாரண்டஅள்ளி ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மொபட் எல்லம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story