விபத்தில் விவசாயி சாவு


விபத்தில் விவசாயி சாவு
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கருஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40) இவரது மனைவி பரிமளா (35). இவா் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் கல்லூரணி ரோட்டில் வெள்ளைச்சாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ரவி மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தின் டிரைவர் விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த பழனி (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story