இண்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு


இண்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 PM IST (Updated: 6 Jun 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே உள்ள இ.கே.புதூரை சேர்ந்தவர் பூவன் (வயது 83). இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை தேடினர். அப்போது முதியவர் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story