அரசு பஸ் மோதி முதியவர் சாவு


அரசு பஸ் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மோதி முதியவர் இறந்தாா்

சிவகங்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). இவர் சம்பவத்தன்று இரவு மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புழுதிபட்டியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் பழனிசாமி மீது மோதியது. இதில் பழனிசாமி தலையில் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டும் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story