நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்


நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ஆறுமுகம் என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்து வேல்முருகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன்படி நீதிமன்றம் மூலம் ஆறுமுகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அவரது மகன் அருள்மணி, உறவினர் கோவிந்தன் மகன் லோகநாதன் ஆகியோர் சேர்ந்து கள்ளக்குறிச்சி உரிமையியல் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வரும் வேல்முருகனின் மனைவி அய்யம்மாள்(36) என்பவரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அருள்மணி, லோகநாதன் ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story