முதியவருக்கு கொலை மிரட்டல்


முதியவருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:47 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன்(வயது 70). இவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மேஸ்திரியாக உள்ளார். அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மகன் குப்புசாமி(45). இவர் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தனது பெயரை சேர்க்கவில்லை எனக் கூறி உலகநாதனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் குப்புசாமி மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story