திருவள்ளூர் அருகே சென்னாவரம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்; தாசில்தார் நடவடிக்கை


திருவள்ளூர் அருகே சென்னாவரம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்; தாசில்தார் நடவடிக்கை
x

திருவள்ளூர் அருகே சென்னாவரம் ஏரியின் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

சென்னாவரம் ஏரி

திருவள்ளூரை அடுத்த சென்னாவரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 62 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து நெற்பயிர் செய்து பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அப்போது சென்னாவரம் ஏரியில் 7 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து நெற்பயிர் செய்திருப்பதை கண்டனர். பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான ஏரியை ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றி மீட்டனர்.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.94 லட்சமாகும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.


Next Story